பதிவு செய்த நாள்
17 ஆக2012
00:27
புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மூன்றாவது முறையாக, விமான எரிபொருள் விலையை, 3.2 சதவீதம் உயர்த்தியுள்ளன.உள்நாட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பீ.பி.சி.எல்.,), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) ஆகிய நிறுவனங்கள், விமான எரிபொருளை சப்ளை செய்து வருகின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, 15 நாட்களுக்கு ஒரு முறை, எரிபொருள் விலையை மாற்றி அமைக்கின்றன.
இதன்படி, ஐ.ஓ.சி., நிறுவனம், டில்லியில், விமான எரிபொருள் விலையை, கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்), 3.2 சதவீதம் அதாவது, 2,130 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதையடுத்து, இதன் விலை, கிலோ லிட்டருக்கு 67,136 ரூபாயாக அதிகரித்துள்ளது. மும்பையில் இதன் விலை, 65,884 ரூபாயிலிருந்து, 68,103 ரூபாயாக உயர்த்தப்
பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டில், விமான எரிபொருள் விலை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, கிலோ லிட்டர், 71,028 ரூபாய் என்றளவில் மிகவும் உயர்ந்திருந்தது. அதன் பிறகு, சென்ற ஜூலை மாதம், இதன் விலை, 61,169 ரூபாய் என்றளவில் குறைந்திருந்தது.விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின், மொத்த செலவில், எரிபொருளின் பங்களிப்பு, 40 சதவீதம் என்றளவில் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|