பதிவு செய்த நாள்
17 ஆக2012
00:32
புதுடில்லி:நடப்பாண்டு ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இணைத்தல், கையகப்படுத்தல் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கை, 43.36 சதவீதம் சரிவடைந்து, 209 கோடி டாலராக (11,495 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
ஆலோசனை நிறுவனம்:இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 369 கோடி டாலராக (20,295 கோடி ரூபாய்) இருந்தது என, சர்வதேச ஆலோசனை நிறுவனமான, கிராண்ட் தார்ன்டன் தெரிவித்துள்ளது.இருப்பினும், சென்ற ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜூலை மாதத்தில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 160 கோடி டாலர் உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை மற்றும் உள்நாட்டில் தொழில் துறையில் காணப்படும் மந்த நிலை போன்றவற்றால், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை குறைந்துள்ளன.
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில், 130 கோடி டாலர் மதிப்பிலான, 17 இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள அவற்றின் துணை நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை இணைத்து கொண்டதன் மதிப்பு, சென்ற ஜூலை மாதத்தில், 13 கோடி டாலராக (715 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
அன்னிய நிறுவனங்கள்:சென்ற ஜூலை மாதத்தில், எட்டு இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்டுள்ளன. இதன் மதிப்பு, 13 கோடி டாலராகும்.அதேசமயம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 10 இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் மதிப்பு, 150 கோடி டாலராகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|