பதிவு செய்த நாள்
17 ஆக2012
10:07
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88.47 புள்ளிகள் அதிகரித்து 17745.68. புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.95 புள்ளிகள் அதிகரித்து 5382.90 புள்ளிகளோடு காணப் பட்டது. உலகளவில் பங்குசந்தைகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்தியாவில் எப்.எம்.ஜி.சி, வங்கி மற்றும் மெட்டல் தொடர்பான பங்குகள் விற்பனையில் நேற்று சரிந்து காணப்பட்டது. வர்த்தக நேர முடிவின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 70.99 புள்ளிகள் சரிந்து 17657.21ஆகவும், தேசிய பங்கசந்தையின் நிப்டி 17.40 புள்ளிகள் சரிந்து 5362.95ஆகவும் இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி, உள்ளிட்ட பங்குகளும், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்திருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|