பதிவு செய்த நாள்
18 ஆக2012
23:59
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 2 கோடி டாலர் (110 கோடி ரூபாய்) உயர்ந்து, 28,917 கோடி டாலராக (15,90,435 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 3ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 28,915 கோடி டாலர் (15,90,325 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரங்களில், செலாவணிகளின் சொத்து மதிப்பு, 3 கோடி டாலர் சரிவடைந்து, 25,692 கோடி டாலராக உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, 2,571 கோடி டாலர் என்றளவிலும், எஸ்.டீ.ஆர். மதிப்பு, 435 கோடி டாலர் என்றளவிலும் உள்ளன.
சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 5 கோடி டாலர் உயர்ந்து, 218 கோடி டாலராக அதிகரித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட நாடுகளின் செலா வணிகளில் ஏற்பட்ட மாறுபட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு அதிகரித்துள் ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|