பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:40
மும்பை:சென்ற ஜூன் மாதத்துடன், நிறைவடைந்த முதல் காலாண்டில், ஒன்பது பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 85,200 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், இருந்ததை விட, 63.7 சதவீதம் அதிகம்.இதே காலாண்டுகளில், தனியார் துறையைச் சேர்ந்த ஏழு வங்கிகளின் வசூலாகாத கடன், 6.1 சதவீதம் உயர்ந்து, 16,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில், வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை, குறிப்பாக, மின்சாரம், விமானச் சேவை, உலோகம் மற்றும் ஜவுளி ஆகிய துறைகளில் ஏற்பட்ட பின்னடைவால், வங்கிகளின் வசூலாகாத கடன் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.பொதுத்துறையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஆந்திரா பேங்க் உள்ளிட்ட பெரிய வங்கிகளின், வசூலாகாத கடன், நடப்புநிதியாண்டின் முதல் காலாண்டில் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|