பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:44
பண்டிகை காலம் துவங்கி யுள்ளதை அடுத்து, தென்னிந்தியாவில் தங்க நகை விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.சென்னையில், நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, 112 ரூபாய் உயர்ந்து 22,688 ரூபாயாக அதிகரித்துள்ளது.தேவைநடப்பாண்டில், தங்கம் விலை உயர்வால், அதன் தேவை குறைந்துள்ளது. சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 38 சதவீதம் குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.ஆனால், பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், வரும் செப்டம்பருடன் முடிவடையும் இரண்டாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. ஓணம் பண்டிகைகேரளாவில், வரும் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தங்க ஆபரணங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுவரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, தங்க நாணயங்கள் விற்பனை மந்தமடைந்துள்ளது. அதே சமயம், தங்க நகை விற்பனையில் சுறு சுறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கிராம், 22 காரட் தங்க நகை விலை, 3,000 ரூபாயை எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தங்கநகை விற்பனை சூடு பிடிக்கத் துவங்கியுள்ளதால், பல முன்னணி நிறுவனங்கள், சிறிய நகரங்களில் விரிவாக்கத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.முன்னணியில் உள்ள தங்க நகை நிறுவனமொன்று, நடப்பாண்டில் தென்னிந்தியா மற்றும் குஜராத்தில், 15 புதிய நகைக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. மொத்த விற்பனைசென்னையில், பிரத்யேக தங்க நகை விற்பனை வளாகத்தை கொண்டுள்ள கேரள நிறுவனமொன்று, நடப்பாண்டில் எட்டு புதிய கிளைகளை திறக்க உள்ளது. திருமண காலத்தையொட்டி, தங்க நகைகளின் மொத்த விற்பனை சூடுபிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|