சேவைகள் துறையில்அன்னிய முதலீடு சரிவு சேவைகள் துறையில்அன்னிய முதலீடு சரிவு ... இந்திய மருந்து சந்தை 15.6 சதவீதம் வளர்ச்சி இந்திய மருந்து சந்தை 15.6 சதவீதம் வளர்ச்சி ...
தங்க நகை விற்பனை சூடு பிடிக்கிறது- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
23:44

பண்டிகை காலம் துவங்கி யுள்ளதை அடுத்து, தென்னிந்தியாவில் தங்க நகை விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.சென்னையில், நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, 112 ரூபாய் உயர்ந்து 22,688 ரூபாயாக அதிகரித்துள்ளது.தேவைநடப்பாண்டில், தங்கம் விலை உயர்வால், அதன் தேவை குறைந்துள்ளது. சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 38 சதவீதம் குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.ஆனால், பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், வரும் செப்டம்பருடன் முடிவடையும் இரண்டாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. ஓணம் பண்டிகைகேரளாவில், வரும் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தங்க ஆபரணங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுவரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, தங்க நாணயங்கள் விற்பனை மந்தமடைந்துள்ளது. அதே சமயம், தங்க நகை விற்பனையில் சுறு சுறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கிராம், 22 காரட் தங்க நகை விலை, 3,000 ரூபாயை எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தங்கநகை விற்பனை சூடு பிடிக்கத் துவங்கியுள்ளதால், பல முன்னணி நிறுவனங்கள், சிறிய நகரங்களில் விரிவாக்கத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.முன்னணியில் உள்ள தங்க நகை நிறுவனமொன்று, நடப்பாண்டில் தென்னிந்தியா மற்றும் குஜராத்தில், 15 புதிய நகைக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. மொத்த விற்பனைசென்னையில், பிரத்யேக தங்க நகை விற்பனை வளாகத்தை கொண்டுள்ள கேரள நிறுவனமொன்று, நடப்பாண்டில் எட்டு புதிய கிளைகளை திறக்க உள்ளது. திருமண காலத்தையொட்டி, தங்க நகைகளின் மொத்த விற்பனை சூடுபிடித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)