பதுக்கலால் தமிழகத்தில் ரசாயன உரங்கள் விலை கடும் உயர்வு பதுக்கலால் தமிழகத்தில் ரசாயன உரங்கள் விலை கடும் உயர்வு ... டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க திட்டமில்லை டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க திட்டமில்லை ...
தேனி மாவட்டத்தில்... ஐந்து கோடி தேங்காய்கள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
23:45

தேவாரம்:ஆந்திரா, கர்நாடகாவில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும்,சந்தையில் சரியான விலை கிடைக்காததாலும், தேனி மாவட்டத்தில் ஐந்து கோடி தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன.தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு, வருஷநாடு, போடி, பெரியகுளம், சுருளியாறு, மஞ்சளாறு பாசன பகுதிகளில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் நெற்றை மொத்த கொள்முதல் செய்து, உரித்து தேங்காயாக பிரித்து, வட மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன், 8 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய், விலை சரிந்து 4 ரூபாய்க்கும் குறைவாக விலை போகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலையை விட, விற்பனை விலை குறைவாக இருப்பதால், தேங்காய்களை உரிக்காமல் நெற்றாக குவித்து வைத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்ட தேங்காய் நெற்றுகள் தேக்கம் அடைந்துள்ளன.விற்பனை விலை மந்தமாக இருப்பதால், நூற்றுக்கணக்கான தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். தேங்காய் மொத்த வியாபாரி கோம்பை கணேசன் கூறியதாவது:ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவில் தேங்காய் அனுப்பப் படுகிறது. போக்குவரத்து செலவு அதிகமாவதால், தமிழகத்தில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்ய வடமாநில வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். விலை குறைவால் கிடங்கு களில் பல லட்சம் தேங்காய்கள் தேங்கியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)