பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:45
தேவாரம்:ஆந்திரா, கர்நாடகாவில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும்,சந்தையில் சரியான விலை கிடைக்காததாலும், தேனி மாவட்டத்தில் ஐந்து கோடி தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன.தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு, வருஷநாடு, போடி, பெரியகுளம், சுருளியாறு, மஞ்சளாறு பாசன பகுதிகளில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் நெற்றை மொத்த கொள்முதல் செய்து, உரித்து தேங்காயாக பிரித்து, வட மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன், 8 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய், விலை சரிந்து 4 ரூபாய்க்கும் குறைவாக விலை போகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலையை விட, விற்பனை விலை குறைவாக இருப்பதால், தேங்காய்களை உரிக்காமல் நெற்றாக குவித்து வைத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்ட தேங்காய் நெற்றுகள் தேக்கம் அடைந்துள்ளன.விற்பனை விலை மந்தமாக இருப்பதால், நூற்றுக்கணக்கான தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். தேங்காய் மொத்த வியாபாரி கோம்பை கணேசன் கூறியதாவது:ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவில் தேங்காய் அனுப்பப் படுகிறது. போக்குவரத்து செலவு அதிகமாவதால், தமிழகத்தில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்ய வடமாநில வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். விலை குறைவால் கிடங்கு களில் பல லட்சம் தேங்காய்கள் தேங்கியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|