பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:46
புதுடில்லி:டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மீதான, விலை கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான மானியம் தொடரும். மத்திய பட்ஜெட்டில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு, 0.82 காசு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.மானியம்மேலும், 14.2 கிலோ கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு, 22.58 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இத்துடன், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை, அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்வதன் மூலம், இழப்பை சந்தித்து வருகின்றன.சென்ற 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறையை சேர்ந்த மூன்று நிறுவனங்கள், மேற்கண்ட மூன்று பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வாயிலாக, 1,38,541 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. மத்திய அரசு, மானியம் நீங்கலாக, 83,500 கோடி ரூபாய் ரொக்க உதவி வழங்கியுள்ளது. ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் ஆகிய மூன்று நிறுவனங்கள், 55 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி வழங்கியுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு, 41 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனங்கள், நாளொன்றுக்கு 450 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்து வருகின்றன.டீசல் விற்பனைஇந்நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 15.55 ரூபாய், மண்ணெண்ணெயில் 29.97 ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டரில், 231 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.இது தவிர, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் 3.80 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த, 2010ம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை, மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதையடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, உள்நாட்டில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன என, ஆர்.பி.என்.சிங் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|