பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:47
புதுடில்லி:நடப்பு 2012-13ம் சந்தை பருவத்தில்(அக்.,-செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, மதிப்பீட்டு அளவான 2.50 கோடி டன் என்றளவில் இருந்து, 2.35 - 2.45 கோடி டன்னாக குறையும் என, எதிர்பார்க்கப்படுவதாக, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.நாட்டின் சர்க்கரை உற்பத்தியில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு, 50.50 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இது, தற்போது, 52.80 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.தற்போது, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில், போதிய அளவிற்கு மழை பெய்யாததால், வறட்சி நிலவுகிறது. இதனால், நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னுக்கு குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் சந்தை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன் என்றளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|