பதிவு செய்த நாள்
23 ஆக2012
10:27
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.75 புள்ளிகள் அதிகரித்து 17931.61 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 5436.85 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், சுணக்கம் கண்டது.ஜப்பான் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது என்ற செய்தியும், ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில், கிரீஸ் நாட்டு நிதி நெருக்கடிக்கான தீர்வு குறித்த எதிர்பார்ப்பு காரணமாகவும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|