பதிவு செய்த நாள்
23 ஆக2012
10:48
சேலம்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், 60 கிளைகளும், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் குளுகுளு உள்ளிட்ட ஹைடெக் வசதிக்கு மாறுகிறது.சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் கரிகாலன் கூறியதாவது:சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில், சேலம் மாவட்டத்தில், 36 வங்கியும், நாமக்கல் மாவட்டத்தில், 24 வங்கியும் செயல்பட்டு வருகிறது. தற்போது, 2,982 கோடி ரூபாய் முதலீட்டில், மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் சேவையை மேம்படுத்தும் விதமாக, அதன் கிளை வங்கிகள் முழுவதுமாக, ஏ.ஸி., மயமாக்குதல், நவீன முறையில் கவுண்டர் மாற்றியமைப்பு, வங்கி வாடிக்கையாளர்களை இசையால், ஆசுவாசப்படுத்த ஏதுவாக, "மியூசாக்' பொருத்தும் பணி, ஒரு கோடியே, 94 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதல் கட்டமாக, சேலம் தலைமையக வங்கி, 31.15 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சேலம் ஃபேர்லேண்ட்ஸ் மகளிர் கிளை வங்கி, 10.18 லட்சம் ரூபாயிலும், நாமக்கல் கிளை வங்கி, 14.81 லட்சம் ரூபாய் மதிப்பிலும் ஏ.ஸி. உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 57 வங்கிகளும், அடுத்தடுத்து, இத்தகைய வசதிகள் செய்யப்பட்டு, நடப்பாண்டு இறுதிக்குள், 60 வங்கிகளும் நவீன மயமாக்கப்பட உள்ளது. வெகு விரைவில் வங்கி முதலீடு, 3,000 கோடியை தாண்டும் அளவில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|