பதிவு செய்த நாள்
24 ஆக2012
00:13
புதுடில்லி:நாடு தழுவிய அளவில், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, 1.40 லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் இருப்பதாக, நிறுவன விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் பார்லிமென்டில் தெரிவித்தார்.ஒரு நிறுவனம், செயல்பட வேண்டுமானால், கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெற வேண்டும். இவ்வகையில், மேற்கண்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல், 1.40 லட்சம் நிறுவனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில், 35,664 நிறுவனங்கள் எவ்வித செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கின்றன. இதையடுத்து, நாட்டின் தலைநகர் டில்லியில், 28,905 நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை, 16,373 ஆக உள்ளது.
அடுத்து, ஆந்திரா (23,284 நிறுவனங்கள்), குஜராத் (11,269), கர்நாடகா (8,221), உத்தரபிரதேசம் (5,316 ), கேரளா (2,422), பஞ்சாப் (2,413), அரியானா (2,206), ராஜஸ்தான் (1,467), மத்திய பிரதேசம்(1,403), சத்திஸ்கர் (1,233), பீகார் (1,019) மேற்கு வங்கம் (967) ஆகிய மாநிலங்கள் உள்ளன.அதேசமயம், லட்சத்தீவு (2 நிறுவனங்கள்), மிசோரம் (6), திரிபுரா (7), அருணாச்சல பிரதேசம் (11), மேகாலயா (15), மணிப்பூர் (18), டாமன் மற்றும் டையூ (25), நாகலாந்து (26) ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேற்கண்ட புள்ளிவிவரம், நடப்பு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வரையிலான நிலவரமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|