பதிவு செய்த நாள்
24 ஆக2012
00:16
புதுடில்லி:சென்ற ஜூன் மாதம் வரையிலுமாக, பொதுத் துறை வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 1,23,462 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு, ஜூன் மாதம் வரையிலுமாக, 1,12,489 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், இதே காலத்தில், 10,973 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் நமோ நாரயண் மீனா பார்லிமென்டில் தெரிவித்தார்.
பொதுத் துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பீ.ஐ.,) நிகர வசூலாகாத கடன், ஜூன் வரையிலுமாக, 40,756 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எஸ்.பீ.ஐ., குழும வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 50,424 கோடி ரூபாயாக உள்ளது.புதிய தனியார் துறை வங்கிகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர வசூலாகாத கடன், 9,544 கோடியாகவும், ஆக்சிஸ் வங்கியின் நிகர வசூலாகாத கடன், 2,006 கோடியாகவும் மற்றும் எச்.டீ.எப்.சி.பேங்க்-ன் வசூலாகாத கடன், 1,832 கோடி ரூபாயாகவும் உள்ளன.
ஜூன் வரையிலுமாக, பொதுத் துறை வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன், 35.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், எஸ்.பீ.ஐ., குழும வங்கிகள் வழங்கிய கடன், 10.64 லட்சம் கோடி ரூபாயாகும் என, அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|