பதிவு செய்த நாள்
24 ஆக2012
01:22
பெங்களூரு:பொதுத் துறையைச் சேர்ந்த கனரா பேங்க், ஆயுள் காப்பீட்டு வசதி கொண்ட சேமிப்பு கணக்கை அண்மையில் அறிமுகம் செய்தது.
ஆண்டு பிரிமியம்:இதன்படி, கனரா வங்கியின், சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு, 1 லட்சம் ரூபாய், ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்கு, மிக குறைந்த அளவில் ஆண்டு பிரிமியம் செலுத்தினால் போதுமானது என, இவ்வங்கியின் செயல் இயக்குனர் ஏ.கே.குப்தா தெரிவித்தார்."கனரா பிரீடம் சுரக்ஷா' என்ற இப்புதிய மதிப்பு கூட்டு சேவையின் மூலம், சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதி கிடைக்கும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இது மிகவும் பயனளிக்கும். மருத்துவ சோதனையின்றி, உடல்நலம் நன்கு உள்ளதற்கு, சுய சான்றிதழ் அளித்தால் போதுமானது.'
விபத்து:வாடிக்கையாளர் இயற்கை அல்லது விபத்தால் மரணம் அடையும்பட்சத்தில், ஆயுள் காப்பீட்டு தொகை வழங்கப்படும். திட்டம் தொடங்கிய முதல் நாளில், 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்தனர். அடுத்த இரண்டு மாதங்களில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை கவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, குப்தா தெரிவித்தார்.வயது வரம்பு:இப்புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தின்படி, 18-35 வயதிற்குட்பட்டவர்கள் 177 ரூபாயும், 36-50 வயதிற்குட்பட்டவர்கள் 366 ரூபாயும், 51-59 வயதிற்குட்பட்டவர்கள் 988 ரூபாயும் ஆண்டு பிரிமியமாக செலுத்த வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|