சரக்கு கையாள்வதில் சென்னைதுறைமுகத்திற்கு இரண்டாம் இடம்சரக்கு கையாள்வதில் சென்னைதுறைமுகத்திற்கு இரண்டாம் இடம் ... சர்வதேச உருக்கு உற்பத்தி 13 கோடி டன் சர்வதேச உருக்கு உற்பத்தி 13 கோடி டன் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கனரா பேங்க்: ஆயுள் காப்பீட்டுடன் சேமிப்பு கணக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2012
01:22

பெங்களூரு:பொதுத் துறையைச் சேர்ந்த கனரா பேங்க், ஆயுள் காப்பீட்டு வசதி கொண்ட சேமிப்பு கணக்கை அண்மையில் அறிமுகம் செய்தது.
ஆண்டு பிரிமியம்:இதன்படி, கனரா வங்கியின், சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு, 1 லட்சம் ரூபாய், ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்கு, மிக குறைந்த அளவில் ஆண்டு பிரிமியம் செலுத்தினால் போதுமானது என, இவ்வங்கியின் செயல் இயக்குனர் ஏ.கே.குப்தா தெரிவித்தார்."கனரா பிரீடம் சுரக்ஷா' என்ற இப்புதிய மதிப்பு கூட்டு சேவையின் மூலம், சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதி கிடைக்கும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இது மிகவும் பயனளிக்கும். மருத்துவ சோதனையின்றி, உடல்நலம் நன்கு உள்ளதற்கு, சுய சான்றிதழ் அளித்தால் போதுமானது.'
விபத்து:வாடிக்கையாளர் இயற்கை அல்லது விபத்தால் மரணம் அடையும்பட்சத்தில், ஆயுள் காப்பீட்டு தொகை வழங்கப்படும். திட்டம் தொடங்கிய முதல் நாளில், 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்தனர். அடுத்த இரண்டு மாதங்களில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை கவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, குப்தா தெரிவித்தார்.வயது வரம்பு:இப்புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தின்படி, 18-35 வயதிற்குட்பட்டவர்கள் 177 ரூபாயும், 36-50 வயதிற்குட்பட்டவர்கள் 366 ரூபாயும், 51-59 வயதிற்குட்பட்டவர்கள் 988 ரூபாயும் ஆண்டு பிரிமியமாக செலுத்த வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)