சர்வதேச உருக்கு உற்பத்தி 13 கோடி டன்சர்வதேச உருக்கு உற்பத்தி 13 கோடி டன் ... "கெயில்' குழாய் பதிக்கும் பணி: விவசாயிகளுக்கு இழப்பீடு "கெயில்' குழாய் பதிக்கும் பணி: விவசாயிகளுக்கு இழப்பீடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் ரூ.46.24 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2012
01:27

மும்பை:நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலுமாக, வங்கிகள் வழங்கிய உணவு சாராக் கடன், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 16.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 46,23,675 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வளர்ச்சி:நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடன் வளர்ச்சி, சராசரியாக 17 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவை ஒட்டியே உள்ளது.
பொருளாதார சுணக்க நிலையால், நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து பெறும் கடன் அளவு குறைந்துள்ளது. பல நிறுவனங்கள், நடைமுறை செலவினத்திற்காக, குறைந்த கால அடிப்படையில், வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன. அதேசமயம், மூலதன செலவிற்காக கடன் வாங்குவது மிகவும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வங்கிகளிடமிருந்து, கடன் வாங்குவது குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ. ஐ), அண்மையில் வீடு மற்றும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பண்டிகை காலம்:பொதுவாக, பண்டிகை காலங்களையொட்டி, அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில், வங்கிகளில் கடன் பெறுவது அதிகரிக்கும் என, கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2011-12ம் நிதியாண்டில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், வங்கி கடன் வளர்ச்சி, 7 சதவீதமாக இருந்தது.
அதேசமயம், ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில், இது, 6 சதவீதம் என்றளவில் இருந்தது. மேலும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், வங்கிகள் வழங்கிய கடன் 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இது, முதல் ஆறு மாத காலத்தில், 5 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்பட்டது.டெபாசிட்:நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலுமாக,வங்கிகள் திரட்டிய டெபாசிட், 62,82,353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 14.83 சதவீதம் அதிகமாகும். இருப்பினும் இது, ரிசர்வ் வங்கி, நடப்பு முழு நிதியாண்டிற்கு, வங்கிகள் திரட்ட வேண்டிய டெபாசிட் இலக்கான 16 சதவீதத்தை விட குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)