ரசாயன கலப்பு இல்லாத...இயற்கை உணவு பொருட்கள் சந்தை ரூ.1,000 கோடியாக உயர்வுரசாயன கலப்பு இல்லாத...இயற்கை உணவு பொருட்கள் சந்தை ரூ.1,000 கோடியாக உயர்வு ... தங்கம் விலை விர்ர்ர்... சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது தங்கம் விலை விர்ர்ர்... சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
'சென்செக்ஸ்' 3 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2012
01:31

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் நடைபெற்று இறுதியாக சமனில் முடிவடைந்தது.அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டின் மத்திய வங்கி கூட்டத்தில், நிதிக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக, நேற்று ஆசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல்தொழில்நுட்பம், ஆரோக்ய பராமரிப்பு, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மோட்டார் வாகனம், பொறியியல் சாதனங்கள், மின்சாரம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்திருந்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 3.36 புள்ளிகள் உயர்ந்து, 17,850.22 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,972.54 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,792.87 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 2.50 புள்ளிகள் அதிகரித்து, 5,415.35 புள்ளிகளில் நிலைகொண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)