பதிவு செய்த நாள்
25 ஆக2012
00:00
சென்னை:நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 312 ரூபாய் அதிகரித்து, 23,264 ரூபாய்க்கு விற்ப னையானது.ஆடி மாதம் முடிந்ததை அடுத்து, திருமண சீசன் களை கட்டத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னை யில், கடந்த சில தினங்களாக, தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
சென்ற 23ம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 22,952 ரூபாய்க்கு விற்பனை யானது. 24 காரட் சுத்த தங்கம், ஒரு கிராம் 3,069 ரூபாய்க்கும், 10 கிராம், 30,685 ரூபாய்க்கும் விற்பனை ஆயின.நேற்று, ஒரே நாளில் தங்கம் விலை, சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து, 23,264 ரூபாய்க்கு விற்பனை யானது. கடந்த இரு நாட்களில் மட்டும், ஒரு சவரன் தங்கத்தின் விலை, 512 ரூபாய் அதிகரித்துள்ளது.
24 காரட், 10 கிராம், சுத்த தங்கம் விலை, 415 ரூபாய் அதிகரித்து, 31,100 ரூபாய்க்கு விற்பனையானது. இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள், சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதா வது:திருமணம் மற்றும் பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டில் தங்க ஆபரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்துள்ளதால், தங்கத்தில் மேற் கொள் ளப் படும் முதலீடு உயர்ந்து வருகிறது. இது போன்ற காரணங்களால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு ஷலானி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|