பதிவு செய்த நாள்
25 ஆக2012
00:10
இந்திய இறால்களில், "எதாக்ஸிக்யுன்' என்ற நச்சுப் பொருளின் அளவு, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதால், இதன் இறக்குமதிக்கு தடை விதிப்பது குறித்து ஜப்பான் பரிசீலித்து வருகிறது.
பண்ணை இறால்கள்:கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் இருந்து, அதிக அளவிலான கடல் உணவுப் பொருள் கள் ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதியாகி வருகின்றன. அவற்றில் "பிளாக் டைகர்' எனப்படும் பண்ணை இறால்களில், 60 சதவீதம், ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து ஏற்றுமதியாகின்றன.இந்த இறால் வகைகளில், "எதாக் ஸிக்யுன்' என்ற நச்சுப் பொருள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் உள்ளதாக ஜப்பான் குற்றம்சாட்டி யுள்ளது. இதைத் தொடர்ந்து, அண்மையில், இந்தியா ஏற்றுமதி செய்த 10க்கும் மேற்பட்ட இறால் சரக்குப் பெட்ட கங்களை ஜப்பான் நிராகரித்து விட்டது. இதனால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறால் பண்ணையாளர்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜி.மொகன்தி கூறும்போது, "ஜப்பான், முன்னறிவிப்பின்றி "எதாக்ஸிக்யுன்' தொடர்பான சோதனையை துவக்கியுள்ளது. இது குறித்து, இந்திய அரசுக்கோ அல்லது ஏற்றுமதியாளர்களுக்கோ முன்னதாக தகவல் ஏதும் தெரிவிக்க வில்லை. ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கையால், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில், கடல் உயிரின வளர்ப்புத் துறை, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறால் விலை, கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது' என்று தெரி வித்தார்.
பாதிப்பு:இத்தகைய போக்கால், வரும் ஆண்டுகளில், பண்ணை இறால் வளர்ப்பு துறை, உற்பத்தியை மேற் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என, அவர் மேலும் கூறினார்.இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான இறால் களை ஜப்பான் ஏற்க மறுத்த நிலையில், ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த ஏராளமான "ஆர்டர்'களும் ரத்து செய் யப்பட்டுள்ளன.மேலும், இந்திய இறால்களின் இறக்குமதிக்கு நிரந்தர தடை விதிக்கவும் ஜப்பான் திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோல்கட்டா துறைமுகத்தில், ஏராளமான இறால் சரக்குப் பெட்டகங்கள் தேங்கியுள்ளன.
வர்த்தக அமைச்சகம்:நிலைமை மோசமாவதை உணர்ந்த மத்திய வர்த்தக அமைச்சகம், சென்னையில் வரும் 27ம் தேதி அவசர கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.இதில்,கடல் உணவுபொருட்கள் துறைசார்ந்த அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இறால் பண்ணையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், வர்த்தக அமைச்சகம் சார்பில், உயர்மட்ட குழு ஒன்று, விரைவில் டோக்கியோ சென்று, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளும் என தெரிகிறது. ஜப்பானை தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும், இந்திய இறால் களுக்கான தேவை குறைந்துள்ளது. இத்தகைய போக்கால், சர்வதேச சந்தையில், இறால் களின் விலை, கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் 25 - 30 சதவீதம் குறைந்துள்ளது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 1.31 லட்சம் டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 2,700 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், முறையே 1.65 லட்சம் டன் மற்றும் 2,870 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
வளர்ச்சி:ஆக, மதிப்பீட்டு காலத்தில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப் படையில், முறையே 20 சதவீதம் மற்றும் 5 சதவீதம் குறைந்துள்ளது.இதே காலத்தில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பில் 20 சதவீதம் குறைந்து 64.50 கோடியில் இருந்து, 51.50 கோடி டாலராக சரிவடைந் துள்ளது.சென்ற 2011-12ம் நிதி யாண்டில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 6.02 சதவீதமும், ரூபாய் மதிப்பின் அடிப்படையில் 28.65 சதவீதமும் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|