பதிவு செய்த நாள்
25 ஆக2012
10:57
உலகளவில், சொகுசு கார் விற்பனையில் முன்னணியில் இருப்பது, ஜெர்மனி நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம் தான். ஆனால், இந்தியாவில், இதற்கு ஆடி கார் நிறுவனம் கடும் போட்டியை அளிக்கிறது. இதை சமாளிக்க, சிறிய நகரங்களில், நடமாடும் கார் ஷோரூம்களை, பி.எம்.டபிள்யூ., நிறுவனம் அமைத்து வருகிறது. முதல் கட்டமாக, உ.பி.,யின் ஆக்ரா, ஹரியானாவின் கர்னால், உத்தர்காண்டின் டேராடூன், ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூர், பீஹாரின் பாட்னா, ம.பி.,யின் போபால், மஹாராஷ்டிராவின் நாசிக் ஆகிய நகரங்களில், இந்த நடமாடும் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற சிறு நகரங்களிலும், இதுபோன்ற ஷோரூம்கள் குறிப்பிட்ட சில வாரங்களுக்கு செயல்படும். வழக்கமாக, பெரிய நகரங்களில் டீலர்கள் நிரந்தரமாக அமைத்துள்ள பி.எம்.டபிள்யூ., ஷோரூம்களில் காணப்படும் வசதிகளுடன், இந்த நடமாடும் ஷோரூம்களும் அமையும். முழுவதும் ஏ.ஸி., வசதியுடன் செயல்படும். மேலும், பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் 3 சீரிஸ், 5 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5 ஆகிய மாடல் கார்கள், பார்வைக்காக நிறுத்தப்படும். டெஸ்ட் டிரைவ் உள்ளிட்ட அனைத்து வசதியும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதுதவிர, இந்த நிறுவனத்தின் பிற மாடல் கார்களான, 7 சீரிஸ், 6 சீரிஸ், இஸட்4 ஆகிய கார்கள் குறித்த முழு தகவல்கள் அடங்கிய புத்தகங்களும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும். இந்த கார்கள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|