"பேக் போஸ்ட்' பார்சல் சேவை தபால் துறையில் அறிமுகம்"பேக் போஸ்ட்' பார்சல் சேவை தபால் துறையில் அறிமுகம் ... தங்கம் விலை தொடர்ந்து இன்றும் உயர்வு தங்கம் விலை தொடர்ந்து இன்றும் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் நடமாடும் கார் ஷோரூம்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2012
10:57

உலகளவில், சொகுசு கார் விற்பனையில் முன்னணியில் இருப்பது, ஜெர்மனி நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம் தான். ஆனால், இந்தியாவில், இதற்கு ஆடி கார் நிறுவனம் கடும் போட்டியை அளிக்கிறது. இதை சமாளிக்க, சிறிய நகரங்களில், நடமாடும் கார் ஷோரூம்களை, பி.எம்.டபிள்யூ., நிறுவனம் அமைத்து வருகிறது. முதல் கட்டமாக, உ.பி.,யின் ஆக்ரா, ஹரியானாவின் கர்னால், உத்தர்காண்டின் டேராடூன், ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூர், பீஹாரின் பாட்னா, ம.பி.,யின் போபால், மஹாராஷ்டிராவின் நாசிக் ஆகிய நகரங்களில், இந்த நடமாடும் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற சிறு நகரங்களிலும், இதுபோன்ற ஷோரூம்கள் குறிப்பிட்ட சில வாரங்களுக்கு செயல்படும். வழக்கமாக, பெரிய நகரங்களில் டீலர்கள் நிரந்தரமாக அமைத்துள்ள பி.எம்.டபிள்யூ., ஷோரூம்களில் காணப்படும் வசதிகளுடன், இந்த நடமாடும் ஷோரூம்களும் அமையும். முழுவதும் ஏ.ஸி., வசதியுடன் செயல்படும். மேலும், பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் 3 சீரிஸ், 5 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5 ஆகிய மாடல் கார்கள், பார்வைக்காக நிறுத்தப்படும். டெஸ்ட் டிரைவ் உள்ளிட்ட அனைத்து வசதியும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதுதவிர, இந்த நிறுவனத்தின் பிற மாடல் கார்களான, 7 சீரிஸ், 6 சீரிஸ், இஸட்4 ஆகிய கார்கள் குறித்த முழு தகவல்கள் அடங்கிய புத்தகங்களும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும். இந்த கார்கள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)