ஒரு சவரன் தங்கம் ரூ.23,288ஆக அதிகரிப்புஒரு சவரன் தங்கம் ரூ.23,288ஆக அதிகரிப்பு ... ஓணம் விற்பனைக்காக 20,000 கிலோ வாடா மல்லி ஓணம் விற்பனைக்காக 20,000 கிலோ வாடா மல்லி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உருக்கு நிறுவனங்களின் வருவாய் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2012
23:53

நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டிலும், உருக்கு உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மந்தநிலை:சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டு உருக்கு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி சரிவடைந்து காணப்பட்டது. சர்வதேச பொருளாதார மந்தநிலையால், இத்தகைய பாதிப்பை உருக்கு நிறுவனங்கள் சந்தித்தன. மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் உருக்கு பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது போன்றவை தான், உருக்கு நிறுவனங்களின் வளர்ச்சி சரிவடைய காரணமாக இருக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் (வர்த்தகம் மற்றும் சந்தைப் படுத்து தல்) ஜெயந்த் ஆச்சார்யா கூறும்போது, "ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ள போதிலும், பல்வேறு உருக்கு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், நடப்புச் சந்தையில் மூலப்பொருட்கள் விலை குறைந்துள்ள போதிலும், முன்பேர சந்தையில் அவற் றின் விலை அதிகரித்துள்ளது' என்று தெரிவித்தார். உதாரணமாக, ஜூலை - செப்., வரையிலான காலத்திற் கான, "கோக்கிங் கோல்' எனப்படும் சிறப்பு வகை நிலக்கரியின் ஒப்பந்த விலை,டன்னுக்கு 221 டாலராக உள்ளது. அதே சமயம், நடப்புச் சந்தையில், அதன் விலை, டன்னுக்கு 175- 180 டாலர் என்ற அளவில் குறைவாக உள்ளது. மற்றொரு முக்கிய மூலப் பொருளான இரும்புத் தாதுவின் விலை, சர்வதேச சந்தையில் சரிவை கண்டுள்ள நிலையிலும், உள்நாட்டில் அதன் விலை உயர்ந்துள்ளது.
என்.எம்.டீ.சி.,:என்.எம்.டீ.சி., நிறுவனம், உள்நாட்டில், இரும்புத் தாதுவின் விலையை, 8-13 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. எனினும், மூன்றாவது காலாண்டில், விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்நிறுவனம் தெரிவித் துள்ளது.சர்வதேச சந்தையில், ஒரு டன் இரும்புத் தாதுவின் விலை,கடந்த சில மாதங்களில், 140 டாலரில் இருந்து 105 டாலராக குறைந்துள்ளது. ஆனால், இதை விட அதிக விலையில், என்.எம்.டீ.சி., உள்நாட்டில் இரும்புத் தாதுவை விற்பனை செய்கிறது.
இதனால், உருக்கு நிறுவனங்களின் மூலப் பொருட்களுக்கான செலவினம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் மிகப் பெரிய அடிப்படை கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப் படாததும், உருக்கு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி சரிவடைய வழிவகுக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)