பதிவு செய்த நாள்
27 ஆக2012
00:59
ஈரோடு:சீல் வைக்கப்பட்ட, 'ஈமு' நிறுவனங்களின் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில், ஏழு ஆண்டுகளாக, 54 நிறுவனங்கள் ஈமு கோழி வளர்ப்பு மூலம் ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளன. மேலும், நாட்டுக்கோழி வளர்ப்பு, அகர் மரம் வளர்ப்பு, லேண்ட் புரமோட்டர்ஸ்... என, பல பெயர்களில் தனியார் நிறுவனங்கள், மக்களிடம் இருந்து, பல கோடிகளை முதலீடாக பெற்று உள்ளன.
ஈமு கோழி வளர்ப்பு மோசடி வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, ஈமு, நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர்கள் பலர் தலைமறைவாகி விட்டனர். 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக, 3,000 பேர் காவல்துறையிடம் புகார் செய்துஉள்ளனர்.ஈமு மற்றும் நாட்டுக்கோழி நிறுவனங்களிடம், ஈரோடு மாவட்ட மத்திய, மாநில அரசு துறையினர், பல உதவிகளைப் பெற்றுள்ளனர். உதாரணமாக, போக்குவரத்தை சரி செய்யும் வகையில் ஏராளமான பேரிகார்டுகள், பயணிகள் நிழற்குடைகள், போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை, ஈமு கோழி நிறுவன விளம்பரத்துடன் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் வைக்கப்பட்டன. சாலையின் மத்தியில் உள்ள தடுப்பு சுவர்கள், பூங்காக்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், ஈமு நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம் பெற்றன.
'ஈமு போன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வரே நேரடியாக அறிவித்துள்ள நிலையில், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் அறிவிப்பு பலகைகளில், ஈமு கோழி நிறுவன விளம்பரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.'ஈமு கோழி நிறுவனங்கள் வழங்கிய பேரிகார்டுகள் சில இடங்களில்தான் உள்ளன. அவற்றை அகற்ற ஏற்பாடு செய்யப்படும்' என, ஈரோடு போக்குவரத்து பிரிவு டி.எஸ்.பி., ராஜு தெரிவித்தார். ஆர்.டி.ஓ., சுகுமார், 'ஈமுகோழி, டி.என்.பி.எஸ்.சி., பிரச்னை போன்றவற்றால், ஆர்.டி.ஓ.,வின் வழக்கமான பணிகள் பாதித்துள்ளன. விளம்பர போர்டுகளை விரைவில் அகற்றுவோம்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|