பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:38
பழநி: பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி வெல்ல சந்தையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வெல்ல விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல்,கோவை மாவட்டங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது.நெய்க்காரப்பட்டி விவசாயிகள் வெல்லச் சந்தையில், ஏலம் மூலம் மொத்த வியாபாரிகளிடம் விற்கின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெல்ல விற்பனை அதிகரித்துள்ளது. இங்கு விற்கப்படும் சிவப்பு, செங்களை, வெள்ளை நிற வெல்லத்திற்கு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மொத்த வியாபாரிகள், சந்தையில் போட்டி போட்டு வெல்லத்தை வாங்கி செல்கின்றனர். ஒரு சிப்பம் (30 கிலோ) 750 முதல், 1,000 ரூபாய் வரை ஏலம் போகிறது.வியாபாரி சையது அபுதாகீர் கூறுகையில், "ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவிற்கு வழக்கத்தை விட கூடுதலாக வெல்லம் அனுப்பப்படுகிறது. வெல்லம் காய்ச்ச கூலியாட்கள் கிடைப்பதில் தான் சிரமம் உள்ளது' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|