பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:38
புதுடில்லி: பொதுத்துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,) நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பல்வேறு நிறுவனப் பங்குகளில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், என்.டி.பி.சி., இன்போசிஸ், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் அதிகளவில் முதலீடு மேற்கொண்டுள்ளது. அதேசமயம், டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களில், அதன் பங்கு முதலீட்டை குறைத்து கொண்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், எல்.ஐ.சி., நிறுவனம், என்.டீ.பி.சி. நிறுவனத்தில், 53 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இதுதவிர, இன்போசிஸ் (36 கோடி டாலர்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (27 கோடி டாலர்), கெய்ரான் இந்தியா (22 கோடி டாலர்), பஜாஜ் ஆட்டோ (20 கோடி டாலர்) ஆகிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களிலும், சிண்டிகேட் பேங்க், அலகாபாத் பேங்க், எச்.டீ.எப்.சி., பேங்க் போன்ற வங்கிகளிலும், மேற்கொண்டிருந்த பங்கு முதலீட்டை குறைத்து கொண்டுள்ளது.சென்ற ஜூன் மாதம் வரையிலுமாக, எல்.ஐ.சி., நிறுவனம், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் கொண்டுள்ள முதலீடு, 49 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. அடுத்த இடங்களில், மின்சாரம் (49 கோடி டாலர்), மோட்டார் வாகனம் (24 கோடி டாலர்), தொலைத்தொடர்பு (7.70 கோடி டாலர்), மருந்து (4.60 கோடி டாலர்), நிதி (4.50 கோடி டாலர்), உலோகம் மற்றும் சுரங்கம் (1.50 கோடி டாலர்) ஆகிய துறைகள் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|