பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:39
மும்பை: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஆகஸ்ட் மாதம் 1 முதல் 24ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 6,749 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 34,814 கோடி ரூபாய் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. 28,065 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு 6,749 கோடி ரூபாயாக உள்ளது.இதே காலத்தில், கடன்பத்திரங்களில் 1,051 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 59,014 கோடி ரூபாயை பங்குகளிலும், 25,303 கோடி ரூபாயை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளன.மத்திய அரசு அறிவிக்க உள்ள நிதிக் கொள்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற எதிர்பார்ப்பில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|