பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:41
புதுடில்லி: உள்நாட்டில், யூரியா உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. இதனால், மூன்று கோடி டன்னுக்கும் அதிகமாக, யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் யூரியா உற்பத்தி, 2.20 கோடி டன்னாக உள்ளது.பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, பல்வேறு நாடுகளிலிருந்து, யூரியா உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. அரசின் முகமை அமைப்புகளான, எம்.எம்.டி.சி., இந்தியன் பொட்டாஷ் மற்றும் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆகியவை, யூரியா உள்ளிட்ட உர வகைகளை இறக்குமதி செய்து, மாநிலங்களின் அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் வாயிலாக, விற்பனைக்கு அனுப்புகின்றன.கடந்த 2010ம் ஆண்டில், மத்திய அரசு, சில்லரை விற்பனையில் யூரியா உர விலையை டன்னுக்கு, 10 சதவீதம் அதிகரித்து, 5,310 ரூபாயாக உயர்த்தியது. தற்போதும் இந்த விலையே நீடிக்கிறது. ஆனால், இதை விட ஐந்துமடங்கு அதிக விலையில், தற்போது யூரியா உரம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|