பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:43
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. பருவமழை குறைவு, சி.ஏ.ஜி. அறிக்கையால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி போன்றவற்றால், பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது.இந்நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, பங்கு வியாபாரம் சரிவுடன் முடிவடைந்தது.மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்று தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில், வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட், அடிப்படை கட்டுமானம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டன. இருப்பினும், நுகர்பொருட்கள், எரிசக்தி, ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 104.40 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 17,678.81 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,820.07 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,662.21 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 36.45 புள்ளிகள் குறைந்து, 5,350.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,399.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,346.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|