பதிவு செய்த நாள்
29 ஆக2012
00:14
புதுடில்லி:சென்ற ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பத்திலான அலைபேசி சேவையை, பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 17 லட்சம் அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், இணைந்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை விட, 0.25 சதவீதம் அதிகமாகும்.
இதையடுத்து, ஜூலை மாதம் வரை, இச்சேவையை பெற்றுள்ள ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 67.90 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துஉள்ளது.சென்ற ஜூலை மாதத்தில், கர்நாடக மாநிலத்தில் தான், மிக அதிகமாக, அதாவது, 6.50 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவையை பெற்றுள்ளனர்.
மதிப்பீட்டு மாதத்தில், ஏர்டெல் நிறுவனம், புதிதாக 15 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.88 கோடியாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவை வழங்குவதில், ஏர்டெல் நிறுவனம், 27 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|