பதிவு செய்த நாள்
29 ஆக2012
23:57
புதுடில்லி:புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக, ரகுராம் ஜி. ராஜன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கவுசிக் பாசுவின் பதவிக் காலம், சென்ற ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, ரகுராம் ஜி. ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சர்வதேச பொருளாதாரம் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனை எதிர்கொள்வதற்கான தீர்வை உருவாக்குவதில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வரும் நாட்களில் வழங்குவேன்' என, தெரிவித்தார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில், கவுரவ ஆலோசகராகவும் உள்ள ரகுராம் ஜி.ராஜன், கடந்த 2008ம் ஆண்டின் சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து முன்கூட்டியே எச்சரித்து, உலகளவில் பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|