பதிவு செய்த நாள்
30 ஆக2012
00:01
கொச்சி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், டயர் தயாரிப்பு நிறுவனங்களின் நிகர லாபம் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என, மோட்டார் வாகன டயர் தயாரிப்பாளர் சங்கம் (அட்மா) தெரிவித்துள்ளது.டயர் தயாரிப்பு நிறுவனங்களின், மொத்த செலவினத்தில், இயற்கை ரப்பரின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்த மூன்று மாதங் களாக, இயற்கை ரப்பர் விலை, 30 சதவீதம் குறைந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் லாபம் உயர்ந்துள்ளது.
சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அப்பல்லோ, எம்.ஆர்.எப்., ஜே.கே., சியட் உள்ளிட்ட முன்னணி எட்டு டயர் தயாரிப்பு நிறுவனங்கள், ஒட்டுமொத்த அளவில், 178 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளன. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், இந்நிறுவனங்கள், 56 கோடி ரூபாயை நிகர இழப்பாக கண்டிருந்தன.
இதே காலாண்டுகளில், இந்நிறுவனங்களின் நிகர விற்பனை, 8,995 கோடியிலிருந்து, 9,685 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இயற்கை ரப்பர் விலை குறைந்திருந்தாலும், டயர் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் இதர மூலப்பொருட்களான, ரப்பர் ரசாயனங்கள், ஸ்டீல் டயர் கார்டு, கார்பன் பிளாக் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது என, இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|