புதிய பங்குகளை 7 தினங்களில் பட்டியலிட நடவடிக்கைபுதிய பங்குகளை 7 தினங்களில் பட்டியலிட நடவடிக்கை ... சிறந்த தரம், உள்நாட்டில் விலை உயர்வால்... பருத்தி இறக்குமதி 12 லட்சம் பொதிகளாக அதிகரிக்கும் சிறந்த தரம், உள்நாட்டில் விலை உயர்வால்... பருத்தி இறக்குமதி 12 லட்சம் ... ...
நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...பால் பவுடர் பயன்பாடு 88,000 டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2012
00:37

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில் பால் பவுடருக்கான தேவை, 88 ஆயிரம் டன்னாகவும், கையிருப்பு 1.12 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, மத்திய வேளாண் இணை அமைச்சர் சரண் தாஸ் மகந்த் பார்லிமென்டில் தெரிவித்தார்.
பால் பவுடருக்கான தேவை குறைவாக உள்ளதால், இதன் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கவில்லை.எனினும், டில்லியில் உள்ள, காரி போலி மொத்த விலை சந்தையில், மாத அடிப்படையிலான இதன் சராசரி விலை, கிலோ ஒன்றுக்கு 175 ரூபாயாக உள்ளது என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டில் பால் விலை மிகவும் அதிகரித்ததை அடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால்பவுடர் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு, தடை விதித்தது. இந்நிலையில், உள்நாட்டில் பால் பொருட்களின்உற்பத்தி அதிகரித்ததால், நடப்பாண்டு ஜூன் மாதம், மீண்டும் பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நடப்பாண்டு மே மாதத்தில், உள்நாட்டில், ஒரு கிலோ கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரின் விலை 150 ரூபாய் என்ற அளவில் இருந்தது.இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 190-200 ரூபாய் என்ற அளவில்மிகவும் அதிகரித்து காணப்பட்டது.உலகளவில், பால் உற்பத்தியில், இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. சென்ற 2011ம் ஆண்டில், நம்நாட்டின் பால் உற்பத்தி 12.10 கோடி டன் என்ற அளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)