பதிவு செய்த நாள்
30 ஆக2012
00:37
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில் பால் பவுடருக்கான தேவை, 88 ஆயிரம் டன்னாகவும், கையிருப்பு 1.12 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, மத்திய வேளாண் இணை அமைச்சர் சரண் தாஸ் மகந்த் பார்லிமென்டில் தெரிவித்தார்.
பால் பவுடருக்கான தேவை குறைவாக உள்ளதால், இதன் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கவில்லை.எனினும், டில்லியில் உள்ள, காரி போலி மொத்த விலை சந்தையில், மாத அடிப்படையிலான இதன் சராசரி விலை, கிலோ ஒன்றுக்கு 175 ரூபாயாக உள்ளது என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டில் பால் விலை மிகவும் அதிகரித்ததை அடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால்பவுடர் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு, தடை விதித்தது. இந்நிலையில், உள்நாட்டில் பால் பொருட்களின்உற்பத்தி அதிகரித்ததால், நடப்பாண்டு ஜூன் மாதம், மீண்டும் பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நடப்பாண்டு மே மாதத்தில், உள்நாட்டில், ஒரு கிலோ கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரின் விலை 150 ரூபாய் என்ற அளவில் இருந்தது.இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 190-200 ரூபாய் என்ற அளவில்மிகவும் அதிகரித்து காணப்பட்டது.உலகளவில், பால் உற்பத்தியில், இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. சென்ற 2011ம் ஆண்டில், நம்நாட்டின் பால் உற்பத்தி 12.10 கோடி டன் என்ற அளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|