பதிவு செய்த நாள்
30 ஆக2012
10:04
மும்பை: இந்தவாரம் முழுக்க சரிவுடன் காணப்படும் இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் நான்காவது நாளிலும் சரிவுடன் துவங்கி இருக்கிறது. இன்றைய காலை நேர வர்த்தக துவக்கத்தின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 79.47 புள்ளிகள் சரிந்து 17,411.34-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 23.50 புள்ளிகள் சரிந்து 5,264.30-ஆகவும் காணப்பட்டது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கம் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில் நடந்துள்ள மோசடி குறித்து சி.ஏ.ஜி., தாக்கல் செய்த அறிக்கை மற்றும் அதைத்தொடர்ந்து காணப்படும் அரசியல் சூழல் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுவதாக பங்கு முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குசந்தைகள் போலவே ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பான் மற்றும் ஹாங்காங் பங்குசந்தைகளும் சரிவுடன் காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|