பதிவு செய்த நாள்
30 ஆக2012
12:26
இந்தியாவில் முதல் முறையாக, பிரமாண்டமான அளவில் ஒரு ஒர்க்ஷாப்பை, மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம் அமைத்துள்ளது.மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு மாடி கட்டிடத்தில் செயல்படும், இந்த சர்வீஸ் சென்டரில், 54 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு ஒரே நாளில், 60 கார்களை கையாள முடியும். மிகவும் திறமை வாய்ந்த, 159 ஊழியர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக, ரூ.52 கோடியை, பென்ஸ் நிறுவனம் செலவிட்டுள்ளது. வீல் அலைன்மென்ட், பெயின்ட் பணி, கார் வாஷ், பாலீஷ், காரின் மேற்புறத்தில் காணப்படும் பழுதுகள் நீக்கம், பொதுவான பழுது நீக்கும் பணி, டயர்கள் மாற்றிக் கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், இங்கு 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|