பதிவு செய்த நாள்
30 ஆக2012
14:45
கார்களின் விற்பனை குறையும் போது, அந்த காரில் சில மாற்றங்களை செய்து, லிமிடெட் எடிசன் மாடலில் விற்பனை செய்வது, கார் நிறுவனங்களின் வழக்கம். அந்த வகையில், மாருதி சுசூகி நிறுவனம், ஏற்கனவே விற்பனையில் உள்ள வேகன் ஆர் காரில், சில மாற்றங்களை செய்து, வேகன் ஆர் ப்ரோ என்ற பெயரில், லிமிடெட் எடிசன் மாடலாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வேகன் ஆர் கார், பல ஆண்டுகளுக்கு முன், ஹுண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ காருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் இதன் விற்பனை மந்தமாக இருந்தாலும், பின்னர் சூடு பிடித்தது. சான்ட்ரோ ஜிங் காரை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய பிறகும், வேகன் ஆர் காரின் விற்பனை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள கே - சீரிஸ் இன்ஜினும், குறைந்த அளவிலான பராமரிப்பு செலவும் தான் இந்த காரின் சிறப்பு அம்சம்.
இந்த சூழ்நிலையில் தான், புதிய வேகன் ஆர் ப்ரோ கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் இது மூன்றாவது தலைமுறை கார் இது. இந்த காரின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் பெட்ரோல் - எல்.பி.ஜி., என இரண்டு வகைகளில் இந்த கார் கிடைக்கிறது. வேகன் ஆர் காரின் விலை ரூ.4.4 லட்சம். புதிய காரின் விலை இதை விட ரூ.20,000 அதிகம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|