ரசாயன உரத்திற்கான  தேவை அதிகரிக்கும் ரசாயன உரத்திற்கான தேவை அதிகரிக்கும் ... அம்பாஸிடர் டீஸல் கார் பெரிய நகரங்களுக்கு வருமா? அம்பாஸிடர் டீஸல் கார் பெரிய நகரங்களுக்கு வருமா? ...
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2012
23:45

புதுடில்லி,: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த, முதல் காலாண்டில், 5.5 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய அரசு, வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .இது, கடந்த 2011-12ம் நிதியாண்டின் இதே காலாண்டில், 8 சதவீதம் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜன.,-மார்ச்), பொருளாதார வளர்ச்சி, 5.3 சதவீதம் என்றளவில் இருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது, முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சியில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தயாரிப்பு, சுரங்கம் மற்றும் வேளாண் துறையில் ஏற்பட்ட மந்த நிலையால், கணக்கீட்டு காலாண்டில், பொருளாதாரம் குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது.தயாரிப்பு துறைஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 0.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இத்துறை, 7.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, முதல் காலாண்டில், 0.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இத்துறை, மைனஸ் 0.2 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டிருந்தது.இதே காலாண்டுகளில், வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.7 சதவீதம் என்ற அளவிலிருந்து, 2.9 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சி, 4 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இப்பிரிவின் வளர்ச்சி, 13.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது.மின்சாரம்கணக்கீட்டு காலாண்டில், மின்சாரம், எரிவாயு, குடிநீர் போன்றவற்றை உள்ளடக்கிய துறையின் உற்பத்தி வளர்ச்சி, 6.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இத்துறையின் வளர்ச்சி, 8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.இருப்பினும், கணக்கீட்டு காலாண்டில், நாட்டின் கட்டமைப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 10.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 3.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.சேவைத்துறைகாப்பீடு, ரியல் எஸ்டேட் போன்றவற்றை உள்ளடக்கிய சேவைத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10.8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 9.4 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது."நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது, நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இரண்டாவது காலாண்டில், இந்த வளர்ச்சி மேம்பட்டு, முழு நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி, 6.7 சதவீதமாக இருக்கும்' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.கடந்த 2009-10 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 6.5 சதவீதமாக மிகவும் சரிவடைந்து போனது.பொருளாதார வளர்ச்சி குறித்து, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:தயாரிப்புத் துறையின் வளர்ச்சி மந்தமாக உள்ளது என்பது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, இத்துறையின் உற்பத்தியை மேம்படுத்த, உள்நாட்டில், முதலீடுகளை அதிகரிக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.கடந்த பல காலாண்டுகளாக, தொடர்ந்து குறைந்து வந்த பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், குறிப்பாக, சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டை விட உயர்ந்துஉள்ளது.தயாரிப்புத் துறையின் உற்பத்தி குறைந்துள்ளது என்றாலும், கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி, கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டை விட (3.5 சதவீதம்), நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, ஊக்கம் அளிப்பதாக உள்ளது.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.திட்ட கமிஷன்இதுகுறித்து திட்டக்குழுவின் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா கூறும்போது,"நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என்ற செய்தி, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இனி வரும், காலாண்டுகளிலும், பொருளாதார வளர்ச்சி, சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்றார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)