பதிவு செய்த நாள்
01 செப்2012
13:57
இந்தியாவில், ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள்களுக்கு என தனி வரவேற்பு உண்டு. இதை ஒரு கவுரவ சின்னமாகவே, மக்கள் நினைக்கின்றனர். டில்லியில் ஜனவரி மாதம் நடந்த வாகன கண்காட்சியில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 500 மாடல் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் மத்தியில் இந்த பைக் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பு 2012ம் ஆண்டின் நான்காவது காலாண்டு துவக்கத்தை எட்டி விட்ட போதிலும், இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என தகவல் ஏதும் கிடைக்கவில்லை. சென்னை திருவொற்றியூரில் உள்ள தொழிற்சாலையில் தான், ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும், கிளாஸிக் 350 மற்றும் தண்டர்பேர்டு 350 பைக்குகளுக்கு, முன்பதிவு செய்துள்ளவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட, முன்பதிவு செய்த ஆறு மாத காலத்துக்கு பிறகு தான், இவர்களுக்கு டெலிவரி செய்யப்படும் சூழ்நிலை காணப்படுகிறது. அந்த அளவுக்கு தொழிற்சாலையில் நெருக்கடி காணப்படுகிறது. இதன் காரணமாக தான், தண்டர்பேர்டு 500 பைக் விற்பனையை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்னும் துவக்கவில்லை என்று கூறப்படுகிறது. புதிய தொழிற்சாலையை, சென்னையை அடுத்த ஒரகடத்தில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த தொழிற்சாலை செயல்பட துவக்கி விடும். எனவே, தண்டர்பேர்டு 500 பைக் விற்பனை எப்போது துவக்கும் என்பதில் இன்னமும் நிச்சயமற்ற நிலை தான் காணப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|