பதிவு செய்த நாள்
01 செப்2012
16:28
ராணுவ தேவைக்கான கவச வாகனங்கள், உள்நாட்டு பயணத்துக்கு உதவாது. எனினும், தற்போதுள்ள பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களால், உள்நாட்டு பயணத்துக்கு ஏற்ற, குண்டு துளைக்காத கார்களை உருவாக்குவதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் கனடாவை சேர்ந்த,"கான்குயிஸ்ட் வைக்கிள்ஸ்' என்ற கார் நிறுவனம், 2008ம் ஆண்டு முதல், "க்னைட் எக்ஸ்வி' என்ற கவச வாகனத்தை தயாரித்து வருகிறது. இந்த வாகனம் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுவது. இயந்திர வசதிகள் பயன்படுத்தாமல், 4,000 மணி நேர உழைப்பில் உருவாக்கப்படுகிறது.
அந்த வகையில், கவச வாகன பிரிவில் வராத, ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) பிரிவில் வரும், "எவாடே' என்ற காரை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கார் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.8.5 கோடி. இந்தியாவில் விற்பனையாகும் எஸ்.யு.வி., கார்களில், இதுவே மிகவும் விலை அதிகமான கார்.
இந்த காரில், 6.8 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். காரின் சாவி உட்பட பெரும்பான்மையான பாகங்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் கைப்பிடிகள், உயர்தர அலுமினியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார், 4 வீல் டிரைவ் வசதி கொண்டது. காரின் உட்புறத்தில் பல பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இரவு நேரத்தில் பார்க்கும் வசதி கொண்ட கேமராக்கள், காரின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில், 6 பேர் பயணம் செய்ய முடியும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|