பதிவு செய்த நாள்
02 செப்2012
00:31
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆக., 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 126 கோடி டாலர் (6,930 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,018 கோடி டாலராக (15,95,990 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 28,892 கோடி டாலர் (15,89,060 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரங்களில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 25,787 கோடி டாலராக உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, 2,571 கோடி டாலர் என்ற அளவிலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 438 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 220 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட நாடுகளின் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு உயர்ந்துஉள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|