பதிவு செய்த நாள்
03 செப்2012
23:38
புதுடில்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வரி வருவாய் 12 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். எனவே, வரி வருவாய் உயர வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.கடந்த, 2007-08ம் நிதி ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வரி வருவாய் 11.9 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 10.1 சதவீதமாக குறைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், வரி வசூல் வாயிலாக, 5,70,257 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு, எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வரி வருவாய் வளர்ச்சி 10.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனை, 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.வரி வருவாய் வசூல், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நிறுவனங்கள், வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள், நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது முன்கூட்டிய வரியை செலுத்த உள்ளன. இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|