பதிவு செய்த நாள்
03 செப்2012
23:39
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலுமாக, நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில், 63 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 62.06 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.இந்தியாவில்,தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் உள்ளன. இச்சந்தைகளில், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், உலோகம், வேளாண் விளை பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீது வர்த்தகம் நடைபெறுகிறது.மதிப்பீட்டு காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம், 20 சதவீதம் சரிவடைந்து, 36.15 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 28.88 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 30 சதவீதம் வளர்ச்சிகண்டு, 6.78 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 8.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 23 சதவீதம் அதிகரித்து, 9.43 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 11.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வர்த்தகம், 40 சதவீதம் வளர்ச்சியடைந்து, 9.68 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 13.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், முன்பேர சந்தைகளில், 173.69 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு காலம் வரையிலுமாக, சர்வதேச அளவில், ஒட்டுமொத்த அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, 630 கோடியைத் தாண்டியுள்ளது. ஒருவரே, பல இணைப்புகளை பெற்றிருப்பதால், உண்மையான எண்ணிக்கை, 430 கோடி என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|