வரி வருவாய் உயர  வேண்டும் - சிதம்பரம் வரி வருவாய் உயர வேண்டும் - சிதம்பரம் ... உலக அலைபேசி பயன்பாடு இந்தியா - சீனா முன்னிலை உலக அலைபேசி பயன்பாடு இந்தியா - சீனா முன்னிலை ...
நாட்டின் முன்பேர வர்த்தகம்ரூ.63 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2012
23:39

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலுமாக, நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில், 63 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 62.06 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.இந்தியாவில்,தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் உள்ளன. இச்சந்தைகளில், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், உலோகம், வேளாண் விளை பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீது வர்த்தகம் நடைபெறுகிறது.மதிப்பீட்டு காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம், 20 சதவீதம் சரிவடைந்து, 36.15 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 28.88 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 30 சதவீதம் வளர்ச்சிகண்டு, 6.78 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 8.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 23 சதவீதம் அதிகரித்து, 9.43 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 11.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வர்த்தகம், 40 சதவீதம் வளர்ச்சியடைந்து, 9.68 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 13.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், முன்பேர சந்தைகளில், 173.69 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு காலம் வரையிலுமாக, சர்வதேச அளவில், ஒட்டுமொத்த அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, 630 கோடியைத் தாண்டியுள்ளது. ஒருவரே, பல இணைப்புகளை பெற்றிருப்பதால், உண்மையான எண்ணிக்கை, 430 கோடி என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)