பதிவு செய்த நாள்
03 செப்2012
23:40
கோபிசெட்டிபாளையம் :பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆயுதபூஜைஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, எல்.பி.பி., காலிங்கராயன் ஆகிய, பாசன பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. கோபி சுற்று வட்டாரத்தில் நாட்டுச் சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகம் உள்ளன.கரும்பு அறுவடை காலம் முடிந்துள்ளதால், வெல்லம் உற்பத்திக்கு தேவையான கரும்பு குறைவாக உள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி என, தொடர்ச்சியாக பண்டிகை காலம் வருவதால், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தேவைக்கு அதிகரித்துஉள்ளது.ஏமாற்றம்பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் வெல்லம் விலை உயரும் என, எதிர்ப்பார்த்த உற்பத்தியாளர்களுக்கு, இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து வெல்லம் வியாபாரிகள் கூறியதாவது:பண்டிகை நெருங்குவதால், வல்லம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைந்ததால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது.கவுந்தபாடி, சித்தோடு வெல்லம் சந்தைகளுக்கு வாரம்தோறும், 50 ஆயிரம் மூட்டை உருண்டை வெல்லம், 30 ஆயிரம் மூட்டை அச்சுவெல்லம், 10 ஆயிரம் மூட்டை நாட்டுச் சர்க்கரை வரும். சீசன் இல்லாததால், தற்போது வரத்து, சராசரியாக, 5,000 மூட்டை என்ற அளவில் குறைந்துள்ளது. வரத்து குறைந்த நிலையிலும், கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை குறைந்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.நாட்டு சர்க்கரைஇரு வாரங்களுக்கு முன், 30 கிலோ மூட்டை அச்சு வெல்லம், 900 முதல் 1,200 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம் 850 - 1,000 ரூபாய், 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நாட்டுச் சர்க்கரை, 1,450 - 1,750 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, அச்சு வெல்லம், 820 - 950 ரூபாய், உருண்டை வெல்லம் 830 - 920 ரூபாய், நாட்டுச் சர்க்கரை, 1,400 - 1,650 ரூபாய் என, விலை குறைந்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|