பதிவு செய்த நாள்
03 செப்2012
23:41
புதுடில்லி: நடப்பு காபி பருவத்தின் (அக்.,-செப்.,), ஆகஸ்ட் வரையிலான, 11 மாத காலத்தில், இந்தியாவின் காபி ஏற்றுமதி, 3.06 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 6.88 சதவீதம் குறைவாகும் என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், மதிப்பின் அடிப்படையிலான காபி ஏற்றுமதி, 96.33 கோடி டாலரிலிருந்து, 91.08 கோடி டாலராக குறைந்துள்ளது. சர்வதேச காபி உற்பத்தியில், இந்தியா, 4.5 சதவீத பங்களிப்புடன், ஐந்தாவது இடத்தில் உள்ளது.நாட்டின் மொத்த காபி உற்பத்தியில், 70-80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள், அதிக அளவில், இந்தியாவிலிருந்து காபியை இறக்குமதி செய்து கொள்கின்றன.சென்ற ஜூலையில், சர்வதேச காபி ஏற்றுமதி, 91.10 லட்சம் மூட்டைகளாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டு, இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, (77.30 லட்சம் மூட்டைகள்) 18 சதவீதம் அதிகம் என, சர்வதேச காபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு காபி பருவத்தில் (அக்-செப்), ஜூலை வரையிலான, பத்து மாத காலத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, முந்தைய பருவத்தின் இதே காலத்தை விட, 1.5 சதவீதம் உயர்ந்து, 8.90 கோடி மூட்டைகளிலிருந்து, 9.03 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|