பதிவு செய்த நாள்
03 செப்2012
23:44
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறையும் என்ற மதிப்பீட்டால், பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது.அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், தேவைப்பட்டால், மேலும் பல ஊக்குவிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என, அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் பென் பெர்னகி அறிவித்தார். இதனால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இருப்பினும், இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. இருப்பினும், பஜாஜ் ஆட்டோ, மாருதி, சிப்லா உள்ளிட்ட ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 45.16 புள்ளிகள் சரிவடைந்து, 17,384.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,509.99 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,349.57 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள்,18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 4.75 புள்ளிகள் குறைந்து, 5,253.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,295.80 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,243.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|