சிங்கம்புணரி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சிசிங்கம்புணரி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி ... முதலீட்டிற்கு சிறந்த வருவாய் அளிக்கும்... புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அதிக வரவேற்பு முதலீட்டிற்கு சிறந்த வருவாய் அளிக்கும்... புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ... ...
மலர் சாகுபடி 17 லட்சம் டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2012
00:01

புதுடில்லி:நாட்டின், மலர் சாகுபடி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2011-12ம் நிதியாண்டில் மலர் உற்பத்தி 17 லட்சம் டன்னை தாண்டியுள்ளது என, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் ஹரிஷ் ராவத், பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில், மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஹரியானா, டில்லி, தமிழகம், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், மலர் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாநிலங்களில், ரோஜா மலர்கள், மஞ்சள் வண்ண பூ, ஆர்கிட், சாமந்தி, கனகாம்பரம், அலரி, சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பல்வகை பூக்கள் உற்பத்தி, 17.14 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, (10.31 லட்சம் டன்) 66 சதவீதம் அதிகமாகும்.
இதே நிதியாண்டுகளில், காம்புடன் கூடிய கொய் மலர்கள் மற்றும் ரோஜா மலர்கள் உற்பத்தி, 690.27 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து, 746.77 கோடியாக அதிகரித்துள்ளது. கொய் மலர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)