பதிவு செய்த நாள்
05 செப்2012
00:01
புதுடில்லி:நாட்டின், மலர் சாகுபடி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2011-12ம் நிதியாண்டில் மலர் உற்பத்தி 17 லட்சம் டன்னை தாண்டியுள்ளது என, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் ஹரிஷ் ராவத், பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில், மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஹரியானா, டில்லி, தமிழகம், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், மலர் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாநிலங்களில், ரோஜா மலர்கள், மஞ்சள் வண்ண பூ, ஆர்கிட், சாமந்தி, கனகாம்பரம், அலரி, சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பல்வகை பூக்கள் உற்பத்தி, 17.14 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, (10.31 லட்சம் டன்) 66 சதவீதம் அதிகமாகும்.
இதே நிதியாண்டுகளில், காம்புடன் கூடிய கொய் மலர்கள் மற்றும் ரோஜா மலர்கள் உற்பத்தி, 690.27 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து, 746.77 கோடியாக அதிகரித்துள்ளது. கொய் மலர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|