பதிவு செய்த நாள்
07 செப்2012
00:40
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் இரு சக்கர வாகன விற்பனை கடும் சரிவை கண்டுள்ளது. இதற்கு, பெட்ரோல் விலை உயர்வு, அதிக வட்டி ஆகியவையே காரணம் என, கூறப்படுகிறது.உள்நாட்டில், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ், ஹோண்டா, டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, சுசூகி மோட்டார் சைக்கிள், மகிந்திரா, யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
சரிவு நிலை:நடப்பாண்டு, ஆகஸ்ட் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 10.71 லட்சமாக குறைந்துள்ளது.இது,கடந்த ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (11.26 லட்சம் வாகனங்கள்) 5 சதவீதம் குறைவாகும்.இது, கடந்த 42 மாதங்களில், இல்லாத சரிவு நிலையாகும்.
கடந்த 2009ம் ஆண்டு, ஜனவரியில், இரு சக்கர வாகன விற்பனை, 5 சதவீதம் குறைந்து, 10.07 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் நிறுவனம்:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா, சுசூகி மோட்டார் சைக் கிள் ஆகிய நிறுவனங்களை தவிர, இதர நிறுவனங்களின் வாகன விற்பனை குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதங் களில், ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் விற்பனை,12 சதவீதம் குறைந்து,5.03 லட்சத்திலிருந்து, 4.43 லட்ச மாகவும், பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை,14 சதவீதம் சரிவடைந்து, 2.26 லட்சத்திலிருந்து, 1.96 லட்சமா கவும் குறைந்துள்ளன.
டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனத்தின் விற்பனை, 17 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.63 லட்சத்திலிருந்து, 1.35 லட்சமா கவும், யமஹா நிறுவனத்தின் விற்பனை, 9 சதவீதம் குறைந்து, 29,934லிருந்து, 27,297 ஆகவும், மகிந்திரா நிறு வன த்தின் விற்பனை, 34 சதவீதம் சரிவடைந்து, 15,120லிருந்து, 10,052 ஆகவும் குறைந்துள்ளன.
அதேசமயம், ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் வாகன விற்பனை, 39 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.60 லட்சத்திலிருந்து, 2.22 லட்சமாகவும், சுசூகி நிறுவனத்தின் விற்பனை, 36 சதவீதம் வளர்ச்சியடைந்து, 26, 900லிருந்து, 36,524 ஆகவும் உயர்ந்துள்ளன.
உள்நாட்டில், சில மாதங்களாக, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கார்களுடன் ஒப்பிடும்போது, இரு சக்கர வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. நாட்டில், நகரங்களுடன் ஒப்பிடும் போது, கிராமங்களில் தான், இரு சக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகின்றன.
வட்டி விகிதம்:தற்போது, பல மாநிலங்களில் பருவ மழை பொய்த்து, வறட்சி நீடிக்கிறது. இதுபோன்ற காரணங்க ளால் தான், ஒட்டுமொத்த அளவில், இரு சக்கர வாகன விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என, இத்துறை யைச் சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்தார்.இருப்பினும், கடந்த ஒரு சில தினங்களாக, வங்கிகள், மோட்டார் வாகன கடன் களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. இதனால், வாகன விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|