பதிவு செய்த நாள்
07 செப்2012
00:51
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், நேற்று முதல், அதன் புதிய "டிசைர்' கார் உற்பத்தியை கூர்கான் தொழிற்சாலை யிலும் துவங்கியுள்ளது.இத்தொழிற்சாலையில் இதுவரை, முந்தைய "டிசைர்' கார் தயாரிக்கப்பட்டு வந்தது. மானேசர் தொழிற் பிரிவில், புதிய "டிசைர்' கார் தயாராகி வந்தன. தொழிலாளர் போராட்டத்தை அடுத்து, இப்
பிரிவு ஒரு மாதம் மூடப்பட்டதால், கார் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது அடுத்த 4-5 மாதங்களில், 65 ஆயிரம் புதிய "டிசைர்' கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.
இதன் காரணமாக, தற்போது கூர்கான் தொழிற்சாலையிலும், புதிய"டிசைர்' கார் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. மானேசர் பிரிவில் பணியாற்றி வந்த, 3,300 தொழிலாளர்களில்,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்ற ஆகஸ்ட் 21ம் தேதி முதல், இப்பிரிவு,300 பணியாளர்களுடன்,மீண்டும் கார் உற்பத்தியை துவங்கியுள்ளது. படிப்படியாக ஒப்பந்த தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப் பட்டு வருகின்றனர். இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து, மீண்டும் முழு வீச்சில் உற்பத்தி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|