பதிவு செய்த நாள்
07 செப்2012
01:11
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறிது ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கும்என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொதுத் துறை நிறுவனங்கள்,வங்கி தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும் மோட்டார் வாகனம் உள் ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 32.93 புள்ளிகள் அதிகரித்து, 17,346.27 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,418.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,17,294.74 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 13 நிறுவ னப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 12.70 புள்ளிகள் உயர்ந்து, 5,238.40 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|