பதிவு செய்த நாள்
07 செப்2012
10:43

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சில்லறை முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்து காணப்பட்டதால் இன்னறய வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 287.09 புள்ளிகள் அதிகரித்து 17633.36 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 86.00 புள்ளிகள் அதிகரித்து 5324.40 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறிது ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கும்என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.51 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|