தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு ... கால்நடை தீவனங்கள் விலை அதிகரிப்பு  பால் விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு கால்நடை தீவனங்கள் விலை அதிகரிப்பு பால் விலையை உயர்த்த தனியார் ... ...
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு தள்ளிவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2012
23:41

புதுடில்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வருவாய் இழப்புஇது குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:பெட்ரோல் உட்பட, பல்வேறு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உடனடியாக, உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு (விலையை உயர்த்தாவிட்டால்) வருவாய் இழப்பு ஏற்படும். இதை குறைக்க, சில கடுமையான, வருத்தம் தரக் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும். பெட்ரோலியத் துறை சந்தித்து வரும் பிரச்னை குறித்து, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு எப்போது கூடி முடிவெடுக்கும் என்று தெரியாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.இக்குழுவிடம், ஒரு குடும்பத்திற்கு, ஓராண்டில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை, 46 என்ற அளவில் நிர்ணயிக்குமாறு பெட்ரோலிய அமைச்சகம், தெரிவித்துஉள்ளது. மேலும், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்கு, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை தவிர்க்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அடுத்த வாரம் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவு எடுக்கும் என, தெரிகிறது.உற்பத்தி செலவுடீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படவில்லை. ஆனால், இவற்றின் உற்பத்திச் செலவு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தவகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாளொன்றுக்கு, 560 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)