கால்நடை தீவனங்கள் விலை அதிகரிப்பு  பால் விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு கால்நடை தீவனங்கள் விலை அதிகரிப்பு பால் விலையை உயர்த்த தனியார் ... ... போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் வெள்ளி விலை போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் வெள்ளி விலை ...
விவசாயக்கடனுக்காக மத்திய அரசு ரூ.10,901 கோடி மானியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2012
10:31

புதுடில்லி: விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரி‌‌ செய்ய, நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.10,901 கோடி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதில் ரூ.3,267 கோடி நபார்டு வங்கிக்கும், மீதமுள்ள ரூ.7,634 கோடி பொதுத் துறை வங்கிகளுக்கும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு வங்கிகள் 7 சதவீத வட்டியில் வேளாண் கடன் வழங்கி வருகின்றன. கடந்த 2006-07ம் ஆண்டு கரீஃப் பருவத்திலிருந்து ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு இந்த வட்டி விகிதத்தில்தான் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2009-10ம் நிதி ஆண்டில், குறுகிய கால பயிர்க் கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு வட்டியில் ஒரு சதவீத தள்ளுபடி சலுகை வழங்கி, அந்த சுமையை அரசே ஏற்றுக் கொண்டது. 2010-11ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சரிவர கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில் மேலும் ஒரு சதவீதம் தள்ளுபடி சலுகை அளித்தது. இதனையடுத்து இத்தகைய விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்க வகை செய்யப்பட்டது. 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இவர்களுக்கு மேலும் ஒரு சதவீத தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டது. இதனால் கடனை முறையாக செலுத்தும் விவசாயிகள் 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதும் என்ற நிலை உருவானது. எனினும் இந்த சலுகைகளால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு மானியம் வழங்கி ஈடு செய்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)