நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.1,540 கோடி உயர்வுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.1,540 கோடி உயர்வு ... மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் முடையும் தொழில் மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் முடையும் தொழில் ...
நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி பூஜ்யம்: சி.ஐ.ஐ., "பகீர்' தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:45

மும்பை:நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி, கிட்டத்தட்ட பூஜ்ய நிலைக்கு சென்று விட்டதால், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்கத் தவறும்பட்சத்தில், நிலைமை படுமோசமாகி விடும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) தலைவர் ஆதி கோத்ரெஜ் எச்சரித்துஉள்ளார்.
சீர்திருத்த நடவடிக்கைகள்:மும்பையில், செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது:நாட்டின் தொழில் வளர்ச்சி, மந்தகதியில் இருந்து, கிட்டத்தட்ட பூஜ்ய நிலைக்கு வந்து விட்டது. இந்த வளர்ச்சி விகிதம், மிகவும் கவலை அளிக்கிறது. பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம், மீண்டும் வளர்ச்சி நிலையை எட்ட வேண்டும். அரசு, இது குறித்து, முடிவு எடுத்து செயல்பட வேண்டிய தருணம் இது.
நமது பொருளாதாரம், இத்தகைய சூழலை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு, அடிப்படை பிரச்னைகளை கொண்டதல்ல. அதனால், புதிய கொள்கை முடிவுகள் மூலம், பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, சுலபமாக எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை காணலாம்.மத்திய, மாநில அரசுகள், சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். அன்னிய முதலீடுகளை பாதிக்கக்கூடிய ("ஜி.ஏ.ஏ.ஆர்' விதிமுறை, வருமான வரி) திட்டங்களை சரி செய்யவேண்டும். ஏற்கனவே, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
÷ஷாம் குழுவின் அறிக்கை விரைவில் அமல்படுத்தப்படும் என, நம்புகிறோம்.நாட்டின் வளர்ச்சிக்கு, மிகப் பெரிய தடையாக, கவலை அளிப்பதாக, நிதிப் பற்றாக்குறை உள்ளது. மத்திய அரசு, எரிபொருள் மானியச் செலவுகளை குறைத்து, பொதுத் துறை நிறுவனப் பங்கு விற்பனை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.அன்னிய முதலீடு:அன்னிய முதலீடு இல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. பன்முக பிராண்டு சில்லறை விற்பனை, விமானம் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அமலானால், மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படும். மாநில அளவில் இருந்து, இச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.இந்திய தொழில் துறையின் மந்தமான வளர்ச்சிக்கு, வங்கிகளின் வட்டி உயர்வும் காரணமாகும். முதலீடுகள் அதிகரிக்க, வங்கிகள் வைத்துள்ள ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.,) மற்றும் வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டி விகிதங்களை, தலா 1 சதவீதம் குறைக்க வேண்டும் இவ்வாறு கோத்ரெஜ் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)